
தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் சினிமாவில் 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் அறிமுகமானார். மேலும் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடந்து தெலுங்கில் சித்ரலகரி, புரோசேவரெவருரா ஆகிய படங்களில் நடித்து டோலிவுட்டிலும் பிரபலமானார். நிவேதா பெத்துராஜ் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி லைவ் சாட்டில் வரும் நிவேதா பெத்துராஜிடம் அவரது ரசிகர்கள் உங்களுக்கு 'சின்ன வயசில் ஏற்பட்ட மறக்க முடியாத விஷயம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க' என்று கேட்டுள்ளனர்.
credit: third party image referenceஅதற்கு பதில் அளித்த நிவேதா பெத்துராஜ், "நான் வெட்கத்தை விட்டு சொல்லுறேன், சின்ன வயசில் பள்ளிக்கூடத்திலிருந்து சாக் பீஸ் திருடி வந்து அதை என் அம்மாவிடம் கொடுத்து கோலம் போட சொல்லுவ, அப்புறம் கரண்ட் கட்டான பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை டார்ச் லைட் அடித்து பயமுறுத்துவேன் என்று கூறி சிரித்துள்ளார்.
No comments:
Post a Comment