நம்மில் சிலர் நாத்திகர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை, இறைவழிபாடு, மந்திர தந்திரங்களை நம்பிதான் உள்ளனர்.
நாம் நல்ல சக்தியாக எண்ணி இறைவனை வழிபடும்போது கெட்ட சக்தியாக இதுபோன்ற பில்லி சூனிய ஏவல்களை பலரும் நம்புகின்றனர்.
நம் வீட்டில் எவரேனும் பில்லி, சூனிய, ஏவல், செய்வினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறிய சில எளிய வழிமுறைகளை கையாளலாம்.
அவற்றில் சில வழிமுறைகள்:
முருங்கை இலையை சாற்றை உள்ளங்கையில் இரண்டு மூன்று சொட்டுகள் விட்டு 5லிருந்து 10 நிமிடம் கழித்து பார்த்தால் அந்த சாறு நீர்த்துப்போய் காணப்பட்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அர்த்தம்.
அதுவே கெட்டியாக மாறியிருந்தால் செய்வினை இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
கண்களைச் சுற்றிலும் கருப்பா கருவளையம் வந்ததுபோல் மாறிவிடும்.
இரவினில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுவர்.
அதிகப்படியான கழுத்து வலியை உணர்வர்.
முதுகுத் தண்டும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.
கெட்ட கெட்ட கனவுகள் அதிகமாக வரும்.
தனியாக இருக்க பயம் கொள்வர்.
உடல் முழுவதும் அதிக வலியை உணர்வர்.
ரசமணியை உள்ளங்கையில் வைத்து மூடச் செய்தால் அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.
No comments:
Post a Comment