நாணம்
அதுவரை வெட்கத்தை சூடியிருந்தாய்உன் முகத்தில்
எனை பார்த்த அந்த நொடி
வேறு வேறாக பாவனைகளை
மாற்ற முயற்சித்து
தோற்றுப்போனாய்
விடாமல் பார்த்தபடி இருந்தேன்
வெட்கம் தலைக்கேறி
விலகி ஓடத் தயாரானாய்
வா என்று கை பிடித்தேன்
வலிய கையை விடுவித்து
இப்படி நீ போவது எங்கே?
தென்றல் காற்றே.
வீரம்
வெளியே சண்டைகள் பல போட்டதுண்டு
தனியே உன்னுடன்சண்டையிட காரணம் இல்லை
ஆனாலும் சட்டென வாளெனவே எடுத்து வீசினாய்
உன் கூந்தல் முடியை
அதில் ஒன்று
வரி வரியால் கீறி என்னை
வளைத்து வீழ்த்தியது
உன் மடியில்
இனி வாராது விடியல்
கடிதம்
அப்படி ஒரு கடிதம்
எழுதவேண்டும் உனக்கு
அணுவணுவாய் நீ இசைக்க
ரசித்து மயங்கி சிரிக்க
யாருக்கும் காட்டாது ரசிக்க
தனியே தவிக்க
நெக்குருகி நினைக்க
நெருஞ்சி பூவாய் கணக்க
பொத்திப் பொத்தி பாதுகாத்து
பூவென எடுத்து ஈரேழு சன்மத்திலும்
எனை நினைக்க வைக்க
அப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும்உனக்கு
No comments:
Post a Comment