இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஆன்மீக குரு நித்தியானந்தாவை பற்றிய செய்திகள் உலாவருகின்றன். நித்யானந்தா ஒரு நாட்டை உருவாக்கியுள்ளார் எனவும் தகவல் வெளியானது. ஆனால் ஈகெடான் நாடு தங்களுக்கு சொந்தமான தீவு எதையும் நித்தியானந்தா வாங்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.

இது குறித்து நேற்றைய வீடியோவில் விளக்கமாளித்தார் "நான் ஒரு போதும் தீவை வாங்கியுள்ளேன் என்று கூறவில்லை, கைலாசா என்பது எல்லைகளற்ற நாடு " என தெரிவித்தார். மேலும் வீடியோவில் பேசுவது நித்தியானந்தா இல்லை என தகவல் வெளியாகின்றன, இதை பார்க்கும் போது சிரிப்பு வருகிறது என்றார்.

மேலும் பேசிய நித்தியானந்தா தனக்கு சிறு வயதில் நடந்த கொடுமைகளில் இருந்த என்னை தகவமைத்து கொண்டு வந்தேன் அதன் மூலம் இந்த உலகம் என்னை பற்றி பேசும் அளவுக்கு உயர்ந்தேன் என்றார்.

மேலும் பேசிய அவர் "தனது கைலாசா இணையதளத்தில் டிராபிக் அதிகமாகி சர்வர் முடங்கியுள்ளது " என்றார். இதனிடையே 13ஆம் நாளுக்குள் நித்தியானந்தாவை கர்நாடகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment