விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடியும் கட்டத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். அந்த வகையில் பல்வேறு பிரபலங்களும் இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடித்து தற்போது கதாநாயகன் கதாநாயகியாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற லாஸ்லியாவுக்கு விரைவில் சீரியல் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதால் தற்போது இவருக்கு ஆதரவாக பல தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் எடுத்த இயக்குனர் பிரவீன் கூறியது என்னவென்றால். ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் லாஸ்லியா உடன் பேசும்போது உங்களுக்கு சினிமா வாய்ப்பு காத்துகொண்டு இருக்கிறது.லாஸ்லியாவாக இருக்கும் நீங்கள் பிக் பாஸ் முடிந்த பிறகு கெயின்லியாவாக மாறுவீர்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment