Saturday 14 December 2019

பள்ளியில் இருந்து மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு..


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார். மாணவி பள்ளியில் வகுப்பில் இருந்தப்போது சிறுமியின் உறவினர் வினோத்குமார்  என்ற இளைஞர் திடீரென பள்ளிக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பிய தலைமை ஆசிரியரும் வகுப்பறையில் இருந்த மாணவியை அந்த இளைஞருடன் அனுப்பிவைத்தார். அதன்பின்னர் மாணவியின் தந்தைக்கு ஆறுதல் கூற செல்போன் மூலம் தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டார். மாணவியை அழைத்துச்சென்றது தொடர்பாக தலைமை ஆசிரியர் கூறியப்போது, தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய தந்தை அச்சத்துடன் மகளை தேடிஓடினார். 

இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறது, ரோஸ்தான் அதை பிரதிபலிக்கிறது அல்லது அதன் காட்சி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

No comments:

Post a Comment